சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு! 90 பேர் மீது வழக்குப்பதிவு!

Default Image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை வீட்டிற்குள் அடங்கி கிடைக்கும் நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மக்களுக்காக வெளியே வந்து உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்து மக்களுக்காக உயிரை தியாகம் செய்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட இன்று பலரும் எதிர்ப்பிலும், தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில், மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேலங்காடு மயானத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்