திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25% முதல் அதிகபட்சம் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
ஏழை, எளிய சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும். இந்த சுமையை எவ்வாறு சமாளிக்க முடியும். கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசு செய்யும் உதவி இதுதானா..? எனவே சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…