அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான நடைமுறைக்கு வரவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சமர்ப்பித்தார்.
420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. அதில், 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ.9740 கோடி மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.
கைவிடப்பட்ட அறிவிப்புகள் – 26, அதன் மதிப்பீடு ரூ.5,469.78 கோடி, நிதி விடுவிக்கப்படாமல் பணி துவங்கபடாமலும் உள்ள அறிவிப்புகள் – 143, அதன் மதிப்பீடு ரூ.76,618.58 கோடி, பணிகள் நடைபெற்று வரும் அறிவிப்புகள்- 348, அதன் மதிப்பீடு ரூ.1,47,922.88 கோடி, நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் – 1167, அதன் மதிப்பீடு ரூ.87,405 கோடி என்றும் செலவினம் ரூ.41,844 கோடி எனவும் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…