பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை – தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவு.

ராணுவத்தில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் தன்னிச்சையாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குறிப்பாக, பிகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் எரிப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முயற்சிகள், பாரத் பந்த் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பிரிவு PRO தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

19 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

40 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

43 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago