#BREAKING : தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை – அரசு உத்தரவு

Default Image

தமிழகம் முழுவதும்  பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்தது.சாத்தான்குளம் விவாகரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது.இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில் , பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

 எனவே தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆஃப்  போலீசை சேர்ந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.இதனிடையே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா? என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது.மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக  தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக டிஜிபி மற்றும் அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ICC CT 2025 INDvNZ - TN CM MK Stalin
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO