நடிகர் சிம்பு தொடந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து, இதனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அவதூறு பரப்பியதாக மைக்கேல் ராயப்பன் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நடிகர் சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் நடிகர் சிம்பு தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் படம் தோல்வி அடைந்ததற்கு சிம்புவே காரணம் எனவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…