காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் …!
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறைகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையசேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
आखिरकार वही हुआ, जिसकी BJP से उम्मीद थी
‘महात्मा गांधी’ के लोकतांत्रिक देश में ‘गोडसे’ के उपासकों ने भारी बारिश और पुलिसबल से संघर्ष करते हुए अन्नदाताओं से मिलने जा रही हमारी नेता @priyankagandhi जी को हरगांव से गिरफ्तार किया..
ये लड़ाई का सिर्फ आरंभ है!! किसान एकता जिंदाबाद pic.twitter.com/vehKIxh87B
— Srinivas BV (@srinivasiyc) October 4, 2021
இந்நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உண்ணாவிரதம்