தமிழகம் முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த தனியார் தண்ணீர் லாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 25,000 தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னையில் மட்டும் தினமும் 5,000 லாரிகள் இயங்குகிறது. இந்த நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தண்ணீர் கிடைக்கும் இடங்களிலும் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க விடாமல் பிரச்சனை செய்வதாவும் கூறி நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், தண்ணீர் எடுக்க அனுமதி தருவதாகவும், தண்ணீர் லாரியில் செல்லும் ஓட்டுனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, நாளை நடைபெற இருந்த போராட்ட அறிவிப்பானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…