தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் , கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு பதில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019-2020 கல்விக் கட்டண பாக்கியை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த அனுமதி அளித்துள்ளது. 35 சதவீத கல்விக் கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணய குழு, கட்டண நிர்ணய நடைமுறையை ஆகஸ்ட் முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறி வழக்கினை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…