தனியார் பள்ளிகள் கட்டணம்: தீர்ப்பு இன்று வெளியாகிறது..!

Published by
murugan

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணத்தை 2 தவணையாக அதாவது 40% மற்றும் 35%  வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிவழங்கியுள்ளது. கட்டணம் செலுத்தாதவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அது தமிழகத்துக்கு பொருந்தாது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து என தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக்குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

9 minutes ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

1 hour ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

2 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

2 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

3 hours ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

3 hours ago