புழல் மத்திய சிறை’ – கடந்த சில நாள்களாகவே சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் சிறைச்சாலையாக இது மாறியுள்ளது. போதைக் கடத்தல் கும்பல் சிறைக்குள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு, கடந்த சில நாள்களாகவே சிறைக்குள் அதிரடியாகச் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டிவி-கள், கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யபட்டன.கிட்டதட்ட நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகச் சிறைவாசிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தது கண்டறிந்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் இதைத் தடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புழல் சிறையில் உள்ள அறைகளுக்கு பூட்டுகளுக்குப் பதிலாக வெளிநாட்டு சிறைகளில் இருப்பது போன்ற டிஜிட்டல லாக் சிஸ்டமும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்தலாம் என்று முடிவாகியுள்ளது. கண்காணிப்புக் கேமராவை சிறைத்துறையின் தலைமையிடத்திலிருந்தே பார்க்கும் வகையில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முடிவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறையினர். புழல் சிறையில் இந்தப் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அரசிடம் அனுமதி கேட்டு, அதற்கான தொகையை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க உள்ளது சிறைத்துறை. ஆசியாவில் மிகப்பெரிய சிறையாகக் கருதப்படும் புழல் சிறை இனி புதிய மாற்றத்தைக் காணப்போகிறது.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…