கைதி தப்பி ஓடிய விவகாரம்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்- எஸ்.பி. அதிரடி!

Published by
Surya

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் இரண்டு பேரை அம்மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் கண்மாய் கரை புதரில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர்.

அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா என்பவர் காளிகோவில் அருகே அந்த சிறுமியை அழைத்து சென்றதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜாவை பிடித்து, காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்பொழுது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜா ஒப்புக்கொண்ட நிலையில், அவரை காவலர்கள் கைது செய்தனர். இன்று அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ராஜா திப்பியோடினர். மேலும், தப்பியோடிய ராஜா பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி கொலை செய்த வழக்கில் கைது செய்த குற்றவாளி ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் முருகையன் மற்றும் கோகுல குமாரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவளித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

2 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

2 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

3 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

4 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

4 hours ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

5 hours ago