கைதி தப்பி ஓடிய விவகாரம்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்- எஸ்.பி. அதிரடி!

Published by
Surya

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் இரண்டு பேரை அம்மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் கண்மாய் கரை புதரில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர்.

அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா என்பவர் காளிகோவில் அருகே அந்த சிறுமியை அழைத்து சென்றதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜாவை பிடித்து, காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்பொழுது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜா ஒப்புக்கொண்ட நிலையில், அவரை காவலர்கள் கைது செய்தனர். இன்று அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ராஜா திப்பியோடினர். மேலும், தப்பியோடிய ராஜா பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி கொலை செய்த வழக்கில் கைது செய்த குற்றவாளி ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் முருகையன் மற்றும் கோகுல குமாரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவளித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago