செங்கல்பட்டு மாவட்டம் அருகே சிறைக்காவலர் ஓட ஓட விரட்டி கொலை…!

Default Image

செங்கல்பட்டு மாவட்டம்  பலூரை அடுத்து பழைய சீவரம் பகுதியில் வசித்து வந்தவர் இன்பரசன் இவர் சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இன்பரசன் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொலைபேசியில் பேசிக் கொண்டே சென்று வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இன்பரசன் உயிரிழந்தார் மேலும் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை கொண்டனர்.

விசாரணையில் அப்பகுதியில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் மகனிற்கும் இன்பரனுக்கும்முன்னதாகவே தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கொண்டு அன்பரசனை கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்