பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளது.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே முதல் அமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பிடு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு தொகையில் மத்திய அரசு 60 % மற்றும் தமிழக அரசு 40 % செலவையும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஜார்கண்டை தொடர்ந்து பிற மாநிலங்களில் படிப்படியாக தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் , ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…