Minister Udhayanidhi stalin [File Image]
சேலம் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது.
சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று, இதில் பூட்டு என்பது தமிழ்நாடு; சுத்தியல் ஒன்றிய பாஜக அரசு; மக்களின் இதயத்தை தொடும் சாவி திமுக என தெரிவித்தார்.
மேலும், 2021 தேர்தலில் அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, திமுகவை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவி வருகிறது.
மக்களுடன் முதல்வர்… சோதனை முறையில் திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு!
பிரதமர் மோடிக்கு எங்கு சென்றாலும் என்னுடைய ஞாபகமாகத்தான். நேற்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறியுள்ளார். நான் 2000 பேர் இருந்த அரங்கில் சமூகநீதி பற்றி பேசினேன். ஆனால் நான் பேசாதவற்றையெல்லாம் பேசி பூதாகரமாக பேசி, ஒட்டுமொத்த இந்தியாவும் என்னை பத்தி தான் பேசுகிறது.
எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்பம் தான் வாழும் என கூறுகிறார்கள். நீங்கள் அத்தனை பேருமே கலைஞரின் கொள்கை வாரிசு தான். எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வாழ்வுபெறும். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…