பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை…! விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

Default Image

பாஜக ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில்,மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
அதேபோல்  சபரிமலை ஐய்யப்பன் கோவில் பிரச்சனையில் கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது .அதேபோல் வரும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தவும் பா.ஜ.க, சங்பரிவார் அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்