பிரதமர் மோடி கூறியது  நல்ல கருத்து வரவேற்கிறேன் – கே.எஸ்.அழகிரி

Default Image

பிரதமர் மோடி கூறியது  நல்ல கருத்து வரவேற்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நாட்டில் வேறுபாடு வராமல் மோடி பார்த்து கொள்ள வேண்டும் .உலகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கம் வருவதற்கு இந்தியா பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். நல்ல கருத்து வரவேற்கிறேன்.
நல்லிணக்கத்துடன் உள்ள தேசத்தில் எந்த பிரிவினையும் வேறுபாடும் வராமல் இருக்க பிரதமர் மோடி பார்த்துக் கொள்ள வேண்டும். வேறுபாட்டை உருவாக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு. உலகத்தில் தொன்மையான மொழி தமிழ் என்று சொல்லியிருக்கிறார். நீண்ட காலம் கழித்து உண்மையை சொல்லி உள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் 3ந் தேதி சென்று ஒரு வாரம் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வேன். தேர்தல் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் எல்லாரும் வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்