தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…!

Published by
லீனா

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை போல, தற்போதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று  வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து தன வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுதல் போன்றவற்றை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

45 minutes ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

1 hour ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

2 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

13 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago