தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் என்று ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி.
பிரதமர் மோடி தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளார். தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வருவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…