பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று நேற்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக குடியரசு தலைவர் வழியாக முடிவை அறிவிப்பார் என்றும் தமிழகம் வரும் பிரதமர் மோடி இதனை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…