பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் -அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு .!

Default Image

பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செய்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். பணிகாலத்தின் போது இயற்கை எய்தும் பத்திரிக்கையாளர் குடும்ப உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

மேலும், சமூக மேம்பாடு/விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கு பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’  வழங்கப்படும். அத்துடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும். இளம் பத்திரிக்கையாளர்கள் உயர்கல்வி பெற அரசு நிதியுதவி வழங்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்