தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்!

அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட வெள்ளையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

RIP Vellayan

சென்னை : தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், கடந்த
செப்.3-ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, சென்னை அமைந்தக்கரையில், உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவா், அதன்பிறகு உடல் நிலை மிகவும் மோசமான காரணத்தால் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். பிறகு மருத்துவமனை தரப்பில் இருந்து  அவருடைய உடல் நிலை குறித்தது அறிக்கை ஒன்றும் வெளியானது.

அந்த அறிக்கையில் வெள்ளையன் ”நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக அவரை மருத்துவர் கண்காணித்து வருவதாகவும் தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்