கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை, உக்கடம் பகுதியில் நடந்த கற் சிலிண்டர் வெடி விபத்து தமிழகத்தில் ஓர் பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். இருந்தும் தமிழக காவல்துறையின் துரித நடவடிக்கைகள் பதற்றத்தை வெகுவாக குறைத்தன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக காவல்துறை உதவியுடன் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெடி விபத்து நடந்த இடம் அருகே உள்ள இந்து கோவிலில் மத நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா உள்ளிட்ட 10 இஸ்லாமிய தலைவர்கள் அங்குள்ள இந்து கோவில் செயல் அதிகாரி, பூசாரி ஆகியோரை சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா, ‘ கோவை கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. மதநல்லினத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. ‘ என கூறினார்.
மேலும், ‘ கோட்டைமேடு பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் மத அரசியலை உட்படுத்த வேண்டாம், எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகத்திற்கு நன்றி. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடக்கும் போதெல்லம் இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.’ எனவும் கூறியுள்ளார் ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…