2 நாள் தமிழக பயணம்.! இன்று மாலை சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!

Tamilnadu CM MK Stalin - Droupati Murmu

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். இன்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்.  குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் வழக்கமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளார. இன்று மாலை தமிழகம வரும் அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட உள்ளார்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

அதன் பிறகு நாளை குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடல சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் வரவுள்ளதால் இன்று மாலை முதலே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் சென்னை முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்