இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை அன்னதானம் தொடரும்… பிரேமலதா விஜயகாந்த்!

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இதனை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். இதன்பின் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் மல்க பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, நம் கேப்டன் இருக்கும் இடம் தான் நமக்கு கோவில். கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் அனைவரும் வணங்கத்தக்க கோவிலாக மாற்றப்படும்.

தலைவர் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். இதுவரை உலகத்தில் இவரைப்போல் ஒரு புண்ணிய ஆத்மா இருந்ததாக வரலாறு கிடையாது, இனியும் அதுபோன்ற வரலாறு வரப்போவதும் கிடையாது. தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் அன்னதானம் என்பது இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை தொடரும்.  அவரது பெயரில் பலர் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!

மேலும், உங்களது விருப்பப்படி, அந்த ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது.  இதனால், வள்ளல் விஜயகாந்த் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் தலைமுறைகளை தாண்டியும் இப்பணி தொடரும் என தெரிவித்தார். மெமோரியல் என்பதை வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முடியும். எனவே, கேப்டன் நமக்காக ஒரு தங்கப்பாதையை அமைத்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

எதற்கும் நாம் பயப்பட வேண்டாம், கேப்டன் விஜயகாந்த் என்னலாம் செய்தாரோ, நினைத்தாரோ அதனை நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து செய்ய போகிறோம். விஜயகாந்த் அவர்கள் சொன்னதை நிச்சயம் நாம் செய்ய போகிறோம் என தொண்டர்கள் மத்தியில் பிரதமலதா விஜயகாந்த் உரையாற்றினார். இதனிடையே, கடந்த 28ம் தேதி அதிகாலை கேப்டன் விஜயகாந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது குறித்தும் அவரது இறுதி நேரங்கள் குறித்தும் கண்ணீர் சிந்தியபடி எடுத்துரைத்தார்.

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

10 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

12 hours ago