கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவ்வாறு, மையங்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்படும் போது பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாக கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரண பொருட்கள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் போது முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழையொட்டி பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய முதலமைச்சர், நீர் நிலைகள் சீரமைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago