கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவ்வாறு, மையங்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்படும் போது பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாக கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரண பொருட்கள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் போது முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழையொட்டி பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய முதலமைச்சர், நீர் நிலைகள் சீரமைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

9 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

11 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

13 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

14 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

15 hours ago