கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும்….அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்..!!

Published by
Dinasuvadu desk

H.I.V-வைரஸ் இரத்தத்தை ஏற்றி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் கணவன் என இருவருக்கும் அரசு  பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிக்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார்  2 லட்ச ரூபாய் நிதி உதவியை பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கினார்.
இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி இலவச வீட்டுமனையும் , இலவச வீடும் உறுதியாக கட்டித் தரப்படும். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றதும் கணவன் மனைவி என இருவருக்கும் அரசு வேலைக்கான  பணி நியமன ஆணை வழங்கப்படும்  என்று அமைச்சர் தெரிவித்தார்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago