அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி வீரமணி – ரமணா. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தை வேண்டாமென முடிவெடுத்து, அந்த குழந்தையை கலைக்க முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் கருவை கலைக்க இ மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார.
மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்ததை எடுத்து தீவிர சிகிச்சைக்குப்பின் அவரது கருவிலிருந்து குழந்தை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்தும் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…