அலட்சியம் வேண்டாம்…! கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும் – மு.க.ஸ்டாலின்

Default Image

திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள்

தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்ற நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள், இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியமாக இருக்க வேண்டாம். திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள் என்றும், தோழமை சக்திகளுக்கு தோல் கொடுத்திட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்