கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சேனலின் அட்மின் செந்தில் வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவரும், அவர்களுக்கு ஸ்டுடியோ வாடகைக்கு தந்தவருமான கார்த்திக் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் எனக் கூறி, கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…