நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு இல்லை – மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திட்டவட்டம்!

Default Image

மரத்துவ படிப்பில் சேருவதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் எடுத்த மார்க் அடிப்படையில் சேர்க்கை இருந்தது. அதனை மாற்றி சில வருடங்களுக்கு முன்னர் நீட் எனும் மருத்துவ நுழைவு தேர்வு கொண்டுவரப்பட்டது.

இது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்வு மொழி, தேர்வுக்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று எழுத அலைக்கழித்தது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் பிழை என நிறைய பிரச்சனைகளை அனுபவித்தனர் தமிழ்வழி கல்வி மாணவர்கள்.

இதனால் நீட் தேர்விற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தற்போதும் ஒலித்து கொண்டிருக்கிறது. இதனால் தான் பிரதான காட்சிகள் கூட தாங்கள் ஜெயித்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கின்றனர்.

தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘ நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்று கொண்ட போது, தமிழகத்தில் மட்டும் விலக்கு அளிக்க சாத்திய கூறுகள் இல்லை. மேலும் நீட் தேர்வின் போது நடைபெறும் சோதனைகள் உச்சநீதிமன்ற விதிகளின் படியே நடைபெறுகின்றன. எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்