முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த தமிழக காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு.
ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த 6 பேரை ஐதராபாத் சம்சாத்பூர் அருகே கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கொள்ளையர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் தற்போது ஐதராபாத் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை மீட்டு வரும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன ரூ.15 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பகிர்ந்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…