சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மே 3-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குவதால் 12-ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்தல் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி திறந்தவுடன் செய்முறைத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…