நீட் தேர்வால் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது – விஜயகாந்த் கருத்து

Default Image

நீட் தேர்வின் மூலம் சாதாரண ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்கும் நிலை உருவாக்கி இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக பாராமல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த தமிழக மாணவர் மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜயகாந்த் தமிழக மாணவர்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி அளித்திருந்தால் அவர்கள் நீட் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்த நிலையில் , தற்போது அதிகம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்