நீட் வேண்டவே வேண்டாம்.! தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு.!

Published by
கெளதம்

சென்னை : 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக தவெக சார்பில் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 28ஆம் தேதி விருது வழங்கப்பட்ட நிலையில், இன்று 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக விஜய் காலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார். 2-ஆம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என விஜய் அன்று கூறிய நிலையில், திடீர் ட்விஸ்டாக இன்று பேசுகிறார் என தகவல் வெளியானது.

அதன்படி, மேடைக்கு வருகை தந்த விஜய், ” எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன். என்ன பேச போகிறேன் என்று உங்களுக்கே தெரியும். நீட் தேர்வு பற்றி தான் என்று தனது உரையை தொடங்கினார்.

நீட் தேர்வு பற்றி பேசிய விஜய், “நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் என்று கூறிய அவர், ஒன்றிய அரசு கால தாமதம் செய்யக்கூடாது. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் கிராமத்தில் இருக்கும் மாணவ மாணவிகள், ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது என்றார்.

நீட் தேர்வு குளறுபடியால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. இதற்கு நீட் தேர்வு விலக்கு அளிப்பது தான் நிரந்தரத் தீர்வு என்று கூறிஉள்ளார். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கிறது என்றால் இடைக்காலத் தீர்வாக இந்திய அரசியலமைப்பை திருத்த வேண்டும்.

சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் வகையில், கல்வி மற்றும் சுகாதாரத்துறையை மாநில பட்டியலுக்கு ஒன்றிய அரசு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

1 hour ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

21 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 day ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

1 day ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

1 day ago