ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை.. மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவு!!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை, கார்ப்பரேட் நிறுவனம், செல்வந்தர்கள் தான் பயனடைகின்றனர். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது என தெரிவித்தார். வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளது என குறிப்பிட்டார்.

சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில வரி வருவாய் திமுக ஆட்சியில் 11.4% ஆக உயர்ந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் 9% ஆக இருந்தது. 2016-21ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவை சந்தித்துள்ளது.

தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இதுபோன்று தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் குறைவாக உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது.

மேலும், கடந்த 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது.  போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன். போக்குவரத்துத் துறையில் பேருந்துகள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago