viral video: குடித்து கார் ஓட்டிய வழக்கறிஞரை விசாரித்ததால் போலீசாரிடம் தரக்குறைவாக வாக்குவாதம்..!

Published by
Sharmi

போலீசாரை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

சென்னையில் நேற்று இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தாறுமாறாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். கொண்டித்தோப்பு பத்மநாதன் பாயிண்ட் சாலையில் நடந்த இந்த சோதனையில் வழக்கறிஞர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் தாறுமாறாக வருவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரை இயக்கியவர் குடித்து விட்டு வந்துள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதனால் காரை பறிமுதல் செய்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் பிறகு, காரை ஓட்டிய வழக்கறிஞர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் ஒரு வழக்கறிஞர் என் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

போலீசார், வழக்கறிஞராக இருந்தாலும் முகக்கவசம் இன்றி வருவது தவறு என்பதை எடுத்துரைத்துள்ளார். இதனால் அந்த போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் காரை ஓட்டி வந்த வழக்கறிஞர். மேலும், இவர் விசிக வழக்கறிஞர் விசுவநாதன் என்பது தெரியப்பட்டுள்ளது. இவருடைய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகிறது.

Published by
Sharmi

Recent Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

51 minutes ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

53 minutes ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

2 hours ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

2 hours ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

3 hours ago