ஜனவரி 5 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு எபபோதும் போல் முதலமைச்சர் சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கபட்டது. இந்த பொங்கல் பரிசு ஜனவரி 5 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை, 2 அடி கரும்பு ஆகியவை அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,84,00,000 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 ஆம்தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஜனவரி 6 ஆம் தேதிமுதல் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என முதலமைச்சர் இன்று அறிவித்தார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்