ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓன்று என்றால் அது பொங்கல் பண்டிகை தான் . பொங்கல் என்றாலே அதற்காக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில் வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை.
கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மொழுகி விடுவார்கள். இப்போது மண் பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெறுப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதுவார்கள். அந்த மண் பாணை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெறுப்புக் கொண்டு ஊத..ஊத புகை உள்ளே பரவி காயை பழுக்கவைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் வாழை பழம் கிடைக்கும்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…