தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்மா முழுவதும் நியாயவிலை கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது. பொங்கல் பரிசு ரூ.1,000-ஐ பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என இருந்துவிட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசான 1,000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என்றும் 4.40 லட்சம் பேர் ஆயிரம் ரூபாயை வாங்காததால் ரூ.43.96 கோடி பணம் திரும்பி வந்துள்ளது எனவும் கூட்டுறவுத்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு…
நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் ,…
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…