பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப்பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.
கடந்த பொங்கலின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக இந்த முறை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
அந்தவகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 ரூபாயுடன், என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக, பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களாக வழங்கலாமா? அல்லது பணம் வழங்கலாமா? என்பதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனவே, பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கம் வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…