பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என வருடந்தோறும் தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்பொழுது ரூ.1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை இன்று (10.01.2024) சென்னை ஆழ்வார் பேட்டையில் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், சக்கரை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நேற்று தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…