பொங்கல் பண்டிகை – சென்னையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்!

Default Image

சென்னையில் நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தமல்லி, கலைஞர் நகர், தாம்பரம் புதிய பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த சிறப்பு கூடுதல் இணைப்பு பேருந்து நாளை முதல் 14-ஆம் தேதி வரையிலும், மீண்டும் 18, 19 ஆகிய திதிகளிலும் இயக்கப்படும் என்றும் கூட்டம் நெரிசலை குறைக்கவும், பயணிகள் எளிதாக பயணிக்கவும் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்