சிலை கடத்தல் வழக்குகள்! பொன் மாணிக்கவேல் தரப்புக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Published by
மணிகண்டன்
  • சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பதவிக்காலம் சென்ற மாதம் 30ஆம் தேதி நிறைவுற்றது.
  • அதனால், பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பதவி காலம் முடிவு பெற்றபிறகு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் பதவி காலத்தை நீடித்து உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த பதவி காலம் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கில் ஆவணங்களை பொன் மாணிக்கவேல் இம்மாதம் 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ஆனால் அவர் சமர்ப்பிக்கவில்லை ஆதலால், தமிழ்நாடு அரசு, பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. அதற்கடுத்து பொன் மாணிக்கவேல் சார்பில் டிசம்பர் 16ஆம் தேதி வரை காலக்கெடு கேட்கப்பட்டது.

அதன்படி விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாயீ தீபக் கூறுகையில், சிலை கடத்தல் தொடர்பான 17,754 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் முகில் ரோத்தகி, பொன் மாணிக்கவேல் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கிய சான்றுகள் இல்லை. என கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ‘ இன்னும் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசிடம் உரிய ஆணவன்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்டது.’ மேலும் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிடபட்டது.

 

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

33 minutes ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago
”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago
“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago