23 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பார்லிமென்ட் டைகர்!மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்க காத்திருக்கும் வைகோ

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் அதேவேளையில் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஏற்கனவே  மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் , இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வைகோ.23 ஆண்டுகளுக்கு பின்னர்தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று அங்கு தனது சூறாவளி பேச்சை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. வைகோவின் அனல் பறக்கும் பேச்சு காரணமாக  பார்லிமென்ட் டைகர் என்றும் அவரை  புகழ்வார்கள்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்