#Breaking: மதுரையில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு.. மக்கள் அதிருப்தி!

Published by
Surya

மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு  வாக்குப்பதிவு துவங்க தாமதமானது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கும் முன், வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர், பணியாளர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்பொழுது மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சலசலப்புக்கு உள்ளானார்கள். போலீசார் சமாதானம் செய்தபின் அவர்கள் அமைதியாக்கினார்கள். அதன்பின் சரியாக 7.45 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடி மையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனவும் பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 mins ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

49 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

55 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

1 hour ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago