தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து அமைதி முறையில் தேர்தல் நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போலீசார் உட்பட தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தபால் வாக்கு செலுத்த தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னையில் தபால் வாக்கு செலுத்த 16 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…