பொள்ளாச்சி பாலியல் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிமுக பிரமுகர்கள் உள்பட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பேரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து ஈரோடு சிறையில் உள்ளனர். தற்போது இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணையில் காணொளி மூலம் திருநாவுக்கரசர் ,சபரி ராஜன் உள்ளிட்ட ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…