பொள்ளாச்சி விவகாரம்:பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டதற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published by
Venu
  • பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரு.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.

பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

Image result for கோவை எஸ்.பி பாண்டியராஜன்

முதலில் பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டனர்.

இந்த அரசாணையில், புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.

இதேபோல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தது.அதில்  பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரு.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் ,வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago