பொள்ளாச்சி சம்பவம் : குண்டர் சட்டம் ரத்தை கண்டு கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்

Default Image

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக   கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .
இதில் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதில்  கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்தது.


இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,பொள்ளாச்சி வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. குண்டர் சட்டம் ரத்தாக அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
INDvNZ - ICC CT 2025 Final
Rain update
Champions trophy 2025 Final prayers
Tamilnadu CM MK Stalin
ICC CT 2025 - IND vs NZ
ilaiyaraaja symphony london